இதனை கண்டிக்கும் விதமாக தமிழகம் முழுவதிலும் உள்ள பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதாகி வருகின்றனர். அதனை முன்னிட்டு இன்று விருதுநகர் அசன் ஹோட்டல் முன்பு பாரதிய ஜனதா கட்சி சார்பில் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் மாநிலத் தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்தும், மேலும் மதுபான ஊழலை கண்டித்தும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
வாகன எரிவாயு தட்டுப்பாடு: ஓட்டுநர்கள் தவிப்பு