விருதுநகர்: கருணாநிதி குறித்து அமைச்சர் புகழாரம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்தநாள் விழா மாநகர திமுக சார்பாக தனியார் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் தங்கம் தென்னரசு அலங்கரிக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

தொடர்ந்து பேசிய அமைச்சர், சமுதாயத்தில் துப்புரவுத் தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான அங்கீகாரத்தை தர வேண்டும். அந்த அங்கீகாரம் உங்களுக்கான இட ஒதுக்கீடாக இருக்க வேண்டும், அங்கேயே அலுவலர்களாக, அதிகாரிகளாக பதவியில் உட்கார வேண்டும் என வழி வகுத்தவர் கருணாநிதி. 

நீங்கள் யாருக்கும் கீழே பணிபுரியாதவர்கள் அல்ல. துப்புரவுத் தொழிலாளர்கள் சொந்தக் காலில் நின்று சுயமரியாதையுடன், பள்ளி மாணவிகள் கல்லூரி படிப்புக்கு செல்லும்போது மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் ஆட்சி ஸ்டாலின் ஆட்சி. அதேபோன்று புதுமைப்பெண் திட்டம், தலைவன் தவப்புதல் திட்டம், பெண்களுக்கான விடியல் பயணம், மகளிர் உரிமைத்தொகை என திமுக தலைமையிலான தமிழக அரசு ஒவ்வொரு சாதனைகளையும் செய்வதற்கு பின்னாலே ஒரு தலைமகன் இருக்கிறார் என்றார்.

தொடர்புடைய செய்தி