சிவகாசி: சாலை விபத்தில் வாலிபர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே நடந்த சாலை விபத்தில் வாலிபர் உயிரிழப்பு.சிவகாசி அருகே புதுப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (27). இவர் தனது டூவீலரில் மருதநத்தம்- எரிச்சநத்தம் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளத்தில் விழுந்துள்ளார்.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கோவிந்தராஜ் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சையில் இருந்த வாலிபர் கோவிந்தராஜ் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து எம். புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி