மக்காத குப்பைகள் மறுசுழற்சிக்கு பயன்படுத்தக்கூடியவை, மறுசுழற்சி செய்ய முடியாதவை என தரம் பிரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மக்காத நெகிழி பைகள் மாதந்தோறும் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. சிவகாசி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளில் சிறப்பாக செயல்பட்டு மக்கும், மக்காத குப்பை என வீடுகளிலிருந்து தினசரி சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை சிறப்பான முறையில் தரம்பிரித்து பணியாற்றிய தூய்மை பணியாளர்களை மாநகராட்சி ஆணையாளர் சரவணன் பொன்னாடை அணிவித்து பரிசுகள் வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி