சிவகாசி: மத்திய அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் மத்திய அமைச்சர் அமித்ஷா பதவி விலக கோரி காங்கிரஸ் எம்எல்ஏ அசோகன் தலைமையில் இன்று பல்வேறு கட்சியினர் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கரை அவமதித்ததை கண்டித்து, நாடு முழுவதிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் சிவகாசியில் மாநகராட்சி, திருத்தங்கல் அம்பேத்கர் சிலை முன்பு சிவகாசி காங்கிரஸ் எம்எல்ஏ அசோகன் தலைமையில் பல்வேறு கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் இன்று (டிசம்பர் 25) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அமைச்சர் அமித்ஷா பதவி விலக கோரி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மதிமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி