சிவகாசி: திமுக ஆட்சியில் விலை உயர்வு - ராஜேந்திரபாலாஜி

திமுக ஆட்சிக்கு வந்தாலே துன்பமும் துயரமும் சேர்ந்தே வந்துவிடுமென சிவகாசியில் நடைபெற்ற பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேச்சு. விருதுநகர் மாவட்டம், சிவகாசி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட 15 வாக்குச்சாவடி மையங்களில் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஏ.லட்சுமிபுரம் பகுதியில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்டக் கழக செயலாளரும் கே.டி. ராஜேந்திரபாலாஜி கலந்துகொண்டு பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி, அடுத்த ஆண்டு நடைபெற இருக்கின்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் புரட்சித் தமிழர் எடப்பாடியாரை முதலமைச்சராக்க அனைவரும் அதிமுகவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், ஓட்டுப்போட்ட மக்களை துன்புறுத்தும் விதமாக திமுக ஆட்சியில் அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்வு, திமுக ஆட்சிக்கு வந்தாலே துன்பமும் துயரமும் சேர்ந்தே வந்துவிடும் என்றும், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் வேலைக்காகக் காத்திருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றார். போதைக் கலாச்சாரம் இல்லாத தமிழ்நாடு ஆகும் வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் முதலமைச்சராக வரவேண்டும் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி