கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருமலைக்குமார் சிவகாசியில் உள்ள வீட்டிற்கு வந்ததிலிருந்து கணவன், மனைவி இருவரும் சண்டை போட்டுள்ளனர். இன்று காலை மீண்டும் இவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கடும் ஆத்திரத்திலிருந்த திருமலைக்குமார், ராஜலட்சுமியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இது குறித்து தகவலறிந்த சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ராஜலட்சுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், மனைவியை கொலை செய்து விட்டு, தலைமறைவாக இருக்கும் கணவனை வலைவீசி தேடி வருகின்றனர்.