விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கஞ்சா விற்றதாக ஆலாவூரணியைச் சேர்ந்த பொன்இருளப்பன் (20), செல்வக்குமார் (23), தினேஷ்குமார் (23) ஆகிய மூன்று இளைஞர்களை திருத்தங்கல் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 110 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சிவகாசி - விருதுநகர் மெயின் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.