மருமகன் இருசக்கர வாகனத்தை ஓட்டி வர மாமனார் பின்னால் அமர்ந்திருந்த நிலையில், அந்தப் பக்கமாக வந்த லாரி எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. விபத்தில் சம்பவ இடத்திலேயே மாமனார் ஜோதிராஜ் உயிரிழந்தார். மருமகன் சார்லஸ் பொன்ரசல் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை செய்து விபத்தில் உயிரிழந்த உடல்களை உடற்கூறாய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுநர் கணேஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.