சிவகாசி அருகே சாலை விபத்தில் முதியவர் பலி. போலீஸார் விசாரணை.விருதுநகர் மாவட்டம், சிவகாசி-சாத்தூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் நந்தீஸ்வரன் (வயது 57). இவர் சம்பவத்தன்று தனது இருசக்கர வாகனத்தில் சிவகாசி-சாத்தூர் ரோட்டில் வந்துள்ளார். அப்போது அவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் சுதிர்தேவ்சீமான் என்பவர் வந்து வாகனம் நந்தீஸ்வரன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் நந்தீஸ்வரன் இருசக்கர வாகனத்தில் இருந்து சாலையில் விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நந்தீஸ்வரன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.