சிவகாசி: கார்த்திகை மாத பிரதோஷ விழாவில் குவிந்த பக்தர்கள்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்றுப் பகுதியிலிருக்கும் சிவன் ஆலயங்களில் கார்த்திகை மாத பிரதோஷ விழா அதிவிமர்சையாக கொண்டாடப்பட்டன. 

பக்தர்கள் கொண்டுவந்த காணிக்கைப் பொருட்களான இளநீர், பால், தயிர், மஞ்சள், பன்னீர், சந்தனம் மற்றும் வாசனைத் திரவியங்களைக் கொண்டு நந்தி பகவானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் நந்தி பகவானுக்கு சந்தனகாப்பு வைத்து வெள்ளிக் கவசம் அணிவித்து வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. 

இந்த பிரதோஷ விழாவில் சிவகாசி மற்றும் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த சிவன் பக்தர்கள் கலந்துகொண்டு நந்தி பகவானை வணங்கிச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி