சிவகாசி: வைகாசி மாத பிரதோஷம்... சிறப்பு பூஜைகள்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான பிரசித்திப்பெற்ற சிவன் கோவிலில், வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று (ஜூன் 8) சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமிக்கும் ஸ்ரீவிசாலாட்சி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமி, ஸ்ரீவிசாலாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

அதனைத் தொடர்ந்து, ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள ஸ்ரீநந்தீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீநந்தீஸ்வர பகவானுக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றன. சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமி - ஸ்ரீவிசாலாட்சி அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களின் அரோகரா கோஷம் மற்றும் மங்கல வாத்தியங்கள் முழங்க கோவில் வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சித் தந்தனர். 

நேற்று மாலை நடைபெற்ற பிரதோஷ கால பூஜைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நந்திபகவானை வணங்கிச் சென்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரிகளும், நிகழ்ச்சி உபயதாரர்களும் சிறப்பாகச் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி