சிவகாசி இறுதி கட்டத்தில் காலண்டர்கள் அனுப்பு பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டம், நாளை புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு இல்லங்களிலும் அலுவலகங்களிலும் ஜனவரி 1ஆம் தேதி புதிய காலண்டர் தொங்கவிடுவது வழக்கம். அதன்படி 2025 புத்தாண்டை வரவேற்கும் வகையில் தமிழகம் முழுவதிலும் காலண்டர் அனுப்பு பணிகள் சிவகாசியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு வகையான தினசரி காலண்டர்களில், டேபிள், பிவிசி, ஆர்ட் பேப்பர் டெய்லி, ஃபேன்ஸி டை கட்டிங் காலண்டர்கள் என பல்வேறு வகையான காலண்டர்கள் உற்பத்தி செய்து அனுப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது இந்த ஆண்டு காலண்டர் விற்பனையில் 5டி எஃபெக்ட் காலண்டர்கள் விற்பனையில் முக்கிய அங்கம் வகித்துள்ளன.
விஐபி காலண்டர் என்று இந்த காலண்டர்களை அழைப்பதும் வழக்கம். 12க்கும் 24 சைஸ்களில் உருவாகியுள்ள இந்தக் காலண்டரில் திருப்பதி, விநாயகர், லட்சுமி, பழனி முருகன், அறுபடை முருகன் உட்பட சாமி படங்கள் மற்றும் கிறிஸ்தவ, இஸ்லாமிய காலண்டர்கள் விற்பனையில் உள்ளன. மேலும் தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களுக்கும் அனுப்பும் பணிகள் முடிவடைந்த நிலையில் தை திருநாளுக்கு அரசியல் கட்சியினருக்கு வழங்குவதற்காக தற்போது அரசியல் கட்சியின் காலண்டர் ஆர்டர்கள் வர தொடங்கியுள்ளன. இந்த வரும் 2025 தைப்பொங்கல் நல்ல விற்பனை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.