சிவகாசி: வெடிவிபத்தில் படுகாயமடைந்தவர் மேல் சிகிச்சைக்கு மாற்றம்

சாத்தூரை அடுத்த கீழதாயில்பட்டியில் கணேசன் என்பவருக்கு சொந்தமான இந்தூஸ்தான் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலை மத்திய வெடிபொருள் கட்டுபாட்டுத் துறையால் அனுமதி பெற்றது. 

மேலும் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியை காலையில் தொடங்கிய நிலையில் பென்சி ரக பட்டாசு தயாரிக்கும்போது தரையில் உராய்வு ஏற்பட்டு திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் 10க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாயின. இந்த வெடிவிபத்தில் படுகாயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாயில்பட்டியை சேர்ந்த கண்ணன் என்பவர் மேலும் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

தொடர்புடைய செய்தி