சிவகாசி: பட்டாசு தொழிலாளி வேன் மோதி சார்பு ஆய்வாளர் காயம்

விருதுநகர் மாவட்டம். சிவகாசி கிழக்கு போலீஸ் காவல் நிலைய சிறப்பு ஆய்வாளர்களைப் பணியாற்றி வருபவர் கனகராஜ், இவர் நேற்று மாலை வழக்கம் போல் சிவகாசி வேலாயுதம் சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பட்டாசு ஆலைக்குச் சொந்தமான வாகனம் சிறப்பு ஆய்வாளர் கனகராஜ் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் அவருது கால் முறிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை ஓட்டி வந்த டிரைவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி