மேலும் தீப்பெட்டி தொழில் தொடங்கி நூறு ஆண்டுகள் ஆகிய நிலையில் நாளை பிப்.15 ஆம் தேதி தனியார் திருமண மண்டபத்தில் வைத்து தீப்பெட்டி தொழிலுக்கு நூற்றாண்டு விழா என்ற தலைப்பில் தீப்பெட்டி ஆலை உரிமையாளர்கள் சங்கம் சார்பாக விழா நடைபெறுகிறது.
இதில் சிறப்பு விருந்தினராக வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமசந்திரன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுவார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் இந்தியா முழுவதும் தீப்பெட்டி தொழில் செய்யும் உரிமையாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.