விருதுநகரில் பாமக முக்கியத் தலைவர் பேட்டி

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா செய்தியாளர்களுக்கு பேட்டிளிக்கையில், பாட்டாளி மக்கள் கட்சியின் சித்திரை மாநாட்டுக்கு பிறகு பாட்டாளி மக்கள் கட்சியில் இணைவதற்கான மக்களின் ஆர்வம் நிறைய மேலோங்கி இருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியில் மக்கள் பணி ஆற்றுவதற்கு விருதுநகர் மத்திய மாவட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். 

தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் விரைவில் தலைவரை சந்திக்க உள்ளனர். விருதுநகர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளராக செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். அதற்கான நியமன கடிதம் வந்தவுடன் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். புதிய மாவட்ட செயலாளர் வந்தவுடன் பழைய மாவட்ட செயலாளர் பதவி காலியாகிவிடும். 

ராமதாஸ் வழிகாட்டுதலின்படி தான் எல்லா நிகழ்ச்சிகளும் நடந்தேறும் என்றார். "உரிமை மீட்பு" நடைபயணத்தில் ராமதாஸ் படம் இடம்பெறவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த திலகபாமா, குற்றம் சொல்ல முடிவு செய்தால் ஒன்றும் செய்ய முடியாது என்று பதிலளித்தார்.

தொடர்புடைய செய்தி