விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே நெடுங்குளத்தில் கடந்த 26.04.2025 அன்று பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த 4 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 லட்சமும், பலத்த காயமடைந்த 2 பேருக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்த 4 பேருக்கு தலா ரூ.50 ஆயிரமும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் முன்னிலையில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஜூன் 6 நேற்று மாலை வழங்கினார். இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் சங்கீதா, துணைமேயர் விக்னேஷ் பிரியா, தாசில்தார் லட்சம் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தங்கத்தின் விலை ஒரே ஆண்டில் கண்ட உச்சம்