விருதுநகர் மாவட்டம், பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு. சிவகாசியை அடுத்த சின்னக்காமன்பட்டியில் கடந்த 1ம் தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஏற்கனவே 9 பேர் உயிரிழந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அழகுராஜா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. மேலும் காயமடைந்த மணிகண்டன், முருகலட்சுமி, கருப்பசாமி ஆகிய 3 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.