விருதுநகர் மாவட்டம் குமாரலிங்கபுரம் சிப்காட் பணிக்காக சாலை அமைக்கும் பணியின் போது அங்குள்ள கண்மாயில் மண் அள்ளியதில் முறைகேடு ஏற்பட்டதாக கூறி சாத்தூர் வட்டாட்சியர் ராமநாதன் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் நீர் மேலாண்மை துறை அலுவலர்கள் உள்ளிட்ட ஏழு பேரை மாவட்ட நிர்வாகம் பணியை சரியாக கவனிக்கவில்லை என தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்திருந்தது. வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் 7 பேரை பணியிடை நீக்கம் செய்த மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் பணியிடை உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி கண்டன ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்