சாத்தூர் அருகே திருமணத்திற்குச் சென்ற இருவர் ஆறு நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்ட வழக்கில், விவசாய நிலத்தில் அனுமதி இன்றி மின்சார வேலி அமைத்த மணிகண்டன் மற்றும் சுதாகர் ஆகிய இருவரை அப்பைய நாயக்கன்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின் பேரில், இருவரும் வரும் 19 ஆம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டனர்.