விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சல்வார்பட்டியில் உள்ள ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியில், அரியர்ஸ் தேர்வுக்கான அரசு நிர்ணயித்த கட்டணத்துடன் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் பெற்றோர் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால், கல்லூரி மாணவர்கள் கல்லூரி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.