சாத்தூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

சாத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் ஜெகதீஸ்வரி முகாமினை தொடங்கி வைத்தார். முகாமில் மகளிர் உரிமை தொகை, முதியோர் உதவி தொகை, பட்டா மாறுதல், கலைஞர் கனவு இல்லம் திட்டம், மகளிர் சுயஉதவிக் குழு கடன் உள்ளிட்ட பல்வேறு குறைகள் குறித்து ஏராளமான பொதுமக்கள் மனு அளித்தனர். 

மேலும் இந்த முகாமில் 600 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் வருவாய் துறை, சமூக நலத்துறை, மருத்துவ துறை ஊரக வளர்ச்சி துறை, வேளாண்மை துறை மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர். 

பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும் என்று தாசில்தார் ராஜாமணி தெரிவித்தார். மேலும் இந்த முகாமில் பல துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி