அருப்புக்கோட்டை: கழிவு மேலாண்மை திட்டம் விழிப்புணர்வு

அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் கழிவு நீர் ஊர்தி பணியாளர்களுக்கு கசடு கழிவு மேலாண்மை திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் உத்தரவுப்படி நகராட்சி சுகாதார அலுவலர் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள், கழிவு நீர் ஊர்தி பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் பற்றியும் அதை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்தும் விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

மேலும் கழிவுநீர் வாகனங்களுக்கு நகராட்சி உரிமமும் வழங்கப்பட்டது. இதில் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கழிவுநீர், வாகனங்களின் உரிமையாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி