சாத்தூர்: சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு.நெல்லையை அடுத்த தாழையூத்து பகுதியை சேர்ந்தார் முத்துமாரி (வயது 48). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர், தனது உறவினரான மாரிச்செல்வத்தின் மோட்டார் சைக்கிளில் சாத்தூர் நோக்கி சென்று கொண்டு இருந்தார். 

அப்போது நள்ளி விலக்கு அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததில் பின்னால் உட்கார்ந்து இருந்த முத்துமாரி பலத்த காயமடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துமாரி உயிரிழந்தார். இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி