சாத்தூர்: பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில் சேவை நீடிப்பு

பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு ரயில் சேவையில் சில மாற்றங்களை தெற்கு ரயில்வே செய்து வருகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: - பயணிகளின் வசதிக்காக தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா-நாகர்கோவில் இடையிலான சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நீட்டிக்கப்படும். 

அதன்படி, காச்சிகுடாவில் இருந்து வருகிற ஜூன் - 13-ந் தேதி முதல் அடுத்த மாதம் ஜூலை 11-ந் தேதி வரை (வெள்ளிக்கிழமை மட்டும்) நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் (வண்டி எண்-07435) இயக்கப்படுகிறது. அதே போல், நாகர்கோவிலில் இருந்து வருகிற ஜூன் -15-ந் தேதி முதல் அடுத்த மாதம் ஜூலை 13-ந் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) காச்சிகுடாவிற்கு சிறப்பு ரயில் (07436) இயக்கப்படுகிறது என்று தெற்கு ரயில்வே செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி