சாத்தூர்: சாலையை கடக்க முயன்றவர் பலி

சாத்தூர் மதுரா கோட்ஸ் காலனியை சேர்ந்தவர் பார்த்தீபன் (73). இவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர். பார்த்திபன் சாத்தூர் மதுரை பஸ் நிறுத்தம் பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது மேட்டமலையில் இருந்து சாத்தூர் சென்ற தனியார் மினி பஸ் இவர் மீது மோதியதாக தெரிகிறது. 

இதில் பார்த்திபன் படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். 

நேற்று ஜூன் 11 அதிகாலை சிகிச்சை பலனின்றி பார்த்திபன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சாத்தூர் நகர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி