விருதுநகர்: சர்ச்சையால் ரயில் பாதை அமைக்கும் பணி முடக்கம்

விருதுநகர் மாவட்டம், மதுரை-அருப்புக்கோட்டை - துாத்துக்குடி அகல ரயில் பாதை அமைக்க இந்தாண்டு ரயில்வே பட்ஜெட்டில் ரூ. 55.16 கோடி ஒதுக்கியும் திட்டத்தை முடக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என காரணம் காட்டி, நிதியை சரண்டர் செய்வதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங், ரயில்வே வாரியத்திற்கு எழுதியுள்ள கடிதத்தால் சிக்கல் நீடிக்கிறது. மதுரையிலிருந்து விருதுநகர், சாத்தூர் கோவில்பட்டி, வாஞ்சிமணியாச்சி வழியாக தற்போது துாத்துக்குடிக்கு பல ரயில்கள் இயக்கப்படுகின்றன. 

159 கி.மீ. தூரம் கொண்ட இவ்வழித்தடத்தில் இரட்டை ரயில்பாதை, மின்மயமாக்கல் பணிகள் முடிந்து முத்துநகர், துாத்துக்குடி-மைசூரு ரயில்கள் இயங்குகிறது. இந்நிலையில் மதுரை- துாத்துக்குடி இடையே அருப்புக்கோட்டை வழியாக ரயில் பாதை அமைக்கும் திட்டம் 2011-12ல் உருவானது. இத்திட்டத்தில் திருப்பரங்குன்றத்தில் பிரிந்து அருப்புக்கோட்டை, மேலமருதூர் வழியாக மீளவிட்டான் வரை 136 கி.மீ.க்கு புதிய ரயில் பாதை அமைய உள்ளது. இதற்காக நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடந்தன. பின் போதிய நிதி ஒதுக்கப்படாததால், நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் போன்ற காரணங்களால் இந்தப்பணி முடங்கியதால், இத்திட்டம் கைவிடப்படுவதாக சர்ச்சைகள் கிளம்பின. எனவே இத்திட்டம் மீண்டும் துவங்கப்படும் என அனைவரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது.

தொடர்புடைய செய்தி