இருசக்கர வாகனங்கள், லாரி, ஆட்டோ என பல்வேறு வாகனங்கள் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் துருப்பிடித்து வீணாகி வருகின்றன. இதனால், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வாகனங்கள் மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் கேட்பாரற்று கிடப்பதால் வாகனங்களில் உள்ள உதிரிபாகங்கள் சமூக விரோதிகளால் திருடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விடாமல் வைத்திருப்பதால் துருப்பிடித்து வீணாவதுடன் ஏலம் விடுவதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.