தற்போது அந்தப் பகுதியில் புதியதாக வீடு கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் புதிய வீடு கட்டுவதற்காக லாரியில் சிமென்ட், செங்கல், கம்பி போன்றவை கொண்டு வரப்படும் நிலையில், தெரு முழுவதும் மண்ரோடாக உள்ளதால் சமீபத்தில் பெய்த மழையில் இந்தப் புதிய ரோடு முழுவதும் சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் சேற்றில் கால் வைத்து நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. டூவீலரில் செல்வோர் சகதி காரணமாக வழுக்கி கீழே விழுந்து காயமடைகின்றனர்.
எனவே ஊராட்சி நிர்வாகத்திடம் இப்பகுதி மக்கள் ரோடு போட வலியுறுத்தி மனு அளித்தும் இன்றுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் கூறுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கி இந்தப் பகுதியில் தார் சாலை அல்லது பேவர் பிளாக் கல் ரோடு அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர்.