சாத்தூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் முதியவர் கைது

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது. விருதுநகர் நகர் பகுதியைச் சேர்ந்த முதியவர் தர்மலிங்கம் (வயது 79), இவர் அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார். தாயார் அளித்த புகாரின் பேரில் சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் முதியவர் தர்மலிங்கத்தின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முதியவர் தர்மலிங்கத்தைக் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி