இந்நிலையில் ஏழாயிரம்பண்ணை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஹரிராம் தலைமையில் போலீசார் ஏழாயிரம்பண்ணை, சேர்வைக்காரன்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமப் பகுதியில் சோதனை நடத்தினர். இதில் பலர் காட்டுப்பகுதியிலும், வீட்டின் பின்பகுதியிலும் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அவர்களில் மார்க்கநாதபுரம் இந்திரா காலனியை சேர்ந்த மான்ராஜ் என்பவரிடமிருந்து பேன்சி ரக வெடிகருவிகள், கருந்திரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் மான்ராஜ் மீது ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்