விருதுநகர்: சட்ட விரோதமாக பட்டாசு திரி வைத்திருந்தவர் கைது

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சட்ட விரோதமாக பட்டாசு திரி வைத்திருந்தவர் கைது. வெம்பக்கோட்டை ஒன்றியம் பாண்டியாபுரம் பஸ்நிறுத்தத்தில் ஏழாயிரம்பண்ணை சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த ஒருவரின் சாக்குப்பையை சோதனை செய்தனர். அதில் சட்டவிரோதமாக தயார் செய்யப்பட்ட 20 குரோஸ் பட்டாசுதிரிகள் இருந்ததுதெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் ஏழாயிரம்பண்ணை எம்.ஜி.ஆர். நகர் தெற்குதெருவைச் சேர்ந்த பொன்ராஜ் (வயது 25) என்பதுதெரியவந்தது. இதையடுத்து பொன்ராஜை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி