இந்த பட்டாசு ஆலையில் 50க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இந்த ஆலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியை துவக்கினர். அப்போது உராய்வு காரணமாக கெமிக்கல் ரூமில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் பணியில் இருந்த மீனாட்சி சுந்தரம், சிவகுமார், காமராஜ், வேல்முருகன், கண்ணன், நாகராஜ் ஆகிய ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை உரிமத்தை தற்காலிகமாக மாவட்ட நிர்வாகம் ரத்து செய்து உத்தரவு வழங்கியுள்ளது.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி