சாத்தூர்: 10 கிலோ மீட்டருக்கு அதிர்வை ஏற்பத்திய வெடி விபத்து

சாத்தூரை அடுத்த கீழதாயில்பட்டியில் கணேசன் என்பவருக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலை மத்திய வெடிபொருள் கட்டுபாட்டுத் துறையால் அனுமதி பெற்றது. மேலும் பட்டாசு தயாரிக்கும் பணியை காலையில் தொடங்கிய நிலையில் பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும்போது தரையில் உராய்வு ஏற்பட்டு திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. 

மேலும் இந்த வெடிவிபத்து தாயில்பட்டி சுற்றிய 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பெரும் அதிர்வை ஏற்படுத்திய வெடி விபத்து. இன்று விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் விதிமீறி பட்டாசு தயாரிக்கப்பட்டது. இந்த வெடிவிபத்தில் 10க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாயின. மேலும் தொடர்ந்து பட்டாசு ஆலைக்குள் வெடி வெடித்துக்கொண்டே இருப்பதால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி