சாத்தூர்: இருசக்கர வாகனங்கள் திருடிய சிறுவர்கள் கைது

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே இருசக்கர வாகனங்கள் திருடிய சிறுவர்கள் கைது.சாத்தூர் நகர் பகுதியை சேர்ந்தவர் பரசுராம் (வயது 20). இவர் தனது வீட்டின் முன்பு தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றார். பின்னர் காலையில் எழுந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணவில்லை. 

இதுகுறித்து சாத்தூர் நகர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் 3 பேர் சேர்ந்து இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் சாத்தூர் நகர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி