மேலும் தகவலின்பேரில் போலீஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து கிணற்றுக்குள் கிடந்த உடலை மீட்டனர். அப்போது கிணற்றில் மீட்கப்பட்டது பார்த்திபன் உடல் என்பது தெரியவந்தது. மேலும் கிணற்றில் கிடந்து மீட்கப்பட்ட உடலை பிரேதபரிசோதனைக்குச் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச்சம்பவம் குறித்து அம்மாபட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, பார்த்திபன் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டானா? எப்படி இறந்தான்? வேறு எதுவும் முன்பகைகாரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம்?