சாத்தூர்: கிணற்றில் இளைஞர் பிணம்.. போலீஸ் விசாரணை

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே கிணற்றில் இளைஞர் பிணம். உடலை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாத்தூர் அருகே உள்ள சாமியார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 19). இவரது தந்தை உயிரிழந்த நிலையில் பாட்டி மீனம்மாள் (75) வீட்டில் வசித்து வந்தார். தனது பேரன் வீட்டைவிட்டு வெளியே சென்றவர், மீண்டும் வீட்டுக்குத் திரும்பவில்லை. இந்தநிலையில் அந்தப் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அம்மாபட்டி காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். 

மேலும் தகவலின்பேரில் போலீஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து கிணற்றுக்குள் கிடந்த உடலை மீட்டனர். அப்போது கிணற்றில் மீட்கப்பட்டது பார்த்திபன் உடல் என்பது தெரியவந்தது. மேலும் கிணற்றில் கிடந்து மீட்கப்பட்ட உடலை பிரேதபரிசோதனைக்குச் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச்சம்பவம் குறித்து அம்மாபட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, பார்த்திபன் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டானா? எப்படி இறந்தான்? வேறு எதுவும் முன்பகைகாரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி