சாத்துார்: வீட்டில் பட்டாசு தயாரித்த 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது

சாத்தூர் அருகே வீட்டில் வைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது. பட்டாசு மற்றும் கருந்திரிகள் பறிமுதல். விருதுநகர் மாவட்டம், சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டை பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது. சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் உத்தரவின் பேரில் கள்ளத்தனமாக வெடி, கருந்திரிகள் தயாரிப்பை தடுப்பு நடவடிக்கை எடுக்கும் விதமாக கடந்த சில நாட்களாக வெம்பக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் வெம்பக்கோட்டை காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் குருநாதன், செண்பகவேலவன் ஆகியோர் தலைமையில் போலீசார் வெம்பக்கோட்டை, தாயில்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பகுதியில் சோதனை நடத்தினார்கள். இதில் பலர் காட்டுப்பகுதியிலும், வீட்டின் பின்பகுதியிலும் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட கலைஞர் காலனியை சேர்ந்த ரோஜா, ஸ்டெல்லா மற்றும் விஜயகரிசல்குளத்தை சேர்ந்த கணேசன் ஆகிய மூன்று பேர்களிடமிருந்து பேன்சி ரக வெடிகள், கருந்திரிகள், ஒத்த வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 3 பேர் மீது வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி