இந்நிலையில் சாத்தூர் நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் வெள்ளைச்சாமி, பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் போலீசார் சாத்தூர், மேட்டமலை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமப் பகுதியில் சோதனை நடத்தினார்கள். இதில் பலர் காட்டுப்பகுதியில் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட இராதாகிருஷ்ணன், மூர்த்தி ஆகியோரிடமிருந்து 25 கிலோ பேன்சி ரக வெடிகள், கருந்திரி, ஒத்த வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இவர்கள் மீது சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்