சாத்தூர்: வானில் வட்டவடிவில் ஆன மேகமூட்டத்தால் பொதுமக்கள் அச்சம்

சாத்தூர் அருகே ஏழாயிரபண்ணை பகுதியில் வானில் வட்டவடிவிலான மேகமூட்டத்தால் பொதுமக்கள் அச்சம் விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணையில் வானத்தில் காணப்பட்ட வட்டவடிவிலான மேகமூட்டத்தால் மக்கள் ஆச்சரியமடைந்தனர். வானில் வெண்மைநிறப் பாறை போன்று உருவத்தில் காணப்பட்ட மேகமூட்டத்தால் மக்கள் சற்று நேரம் பீதியடைந்தனர். மேகமூட்டம் வேகமாக செல்வது போன்று காணப்பட்டதால் தரையில் விழுந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். சுமார் 3 மணிநேரத்திற்கு மேலாக வானில் தெரிந்ததை ஆச்சரியத்துடன் பார்த்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் இப்பகுதியில் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி