விருதுநகர்: இரு டூவீலர் மோதிய விபத்தில் ஒருவர் காயம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டியைச் சேர்ந்த ஐயப்பெருமாள் என்பவர் நடந்து சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது பலராமன் என்பவர் ஓட்டி வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் கார்த்திகேயப்பெருமாள் என்பவரின் தந்தை ஐயப்பெருமாள் காயமடைந்த நிலையில் இந்த விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அளித்த புகார் அடிப்படையில் சாத்தூர் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி