விருதுநகர்: இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தவர் பலி

விருதுநகர் மாவட்டம் செங்குன்றம் பகுதியை சார்ந்தவர் காளிராஜ் வயது 30. இவருடைய மனைவி மாரியம்மாள். காளிராஜ் தனது இருசக்கர வாகனத்தில் தனது நண்பரை பார்ப்பதற்காக அழகாபுரி விருதுநகர் சாலையில் மூலிப்பட்டி விளக்கு அருகே வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்திலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். 

இதில் காயமடைந்த காளிராஜ் முதலுதவி அளிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் ஆமத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி