சாத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் மாதந்தோறும் நடைபெறும் உண்டியல் திறக்கும் பணி நேற்று (நவம்பர் 17) நடைபெற்றது. இதில் ₹34 லட்சத்து 56 ஆயிரத்து 768 ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்தது. இந்த உண்டியல் திறக்கும் பணியில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், பொதுமக்கள், கோயில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.