இந்த தீ விபத்தில் பனையடிப்பட்டியை சேர்ந்த பாலகுருசாமி (50) சம்பவ இடத்திலேயே உடல் சிதறிய நிலையில் உயிரிழந்துள்ளார். மேலும் கண்ணன், ராஜபாண்டி, ராஜசேகர், கமலேஷ் ராம், ராகேஷ் வட மாநிலத் தொழிலாளர்கள் என இருவர் உட்பட 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் ஜேசிபி வாகனம் மூலம் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பட்டாசு ஆலையின் போர்மேன் யோகநாதன் கைது செய்யப்பட்டு வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.