விருதுநகர் அருகே வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழ்வாய்வில் செம்பினால் செய்யப்பட்ட அஞ்சன கோல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவரது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜய கரிசல் குளத்தில் நடைபெற்று வரும் 3-ம் கட்ட அகழாய்வில், 22 குழிகள் தோண்டப்பட்டு அகழ்வாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. அகழ்வாய்வில் இதுவரை சங்கு வளையல்கள், கண்ணாடி மணிகள், சுடுமண் குவளைகள், சூது பவள மணி, உள்ளிட்டவை என 4,400-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போது நடைபெற்று வரும் அகழ்வாய்வில் செம்பினால் செய்யப்பட்ட அஞ்சன கோல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொல்லியல் அகழ்வாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர், மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணியில் மொத்தமாக 4400-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில், 13 செន்டிமீட்டர் ஆழத்தில் 29.5 மில்லிமீட்டர் நீளமும், 6.6 மில்லிமீட்டர் சுற்றளவும், 2.64 மில்லிகிராம் எடையும் கொண்ட செம்பினால் செய்யப்பட்ட "அஞ்சன கோல்" கிடைக்கப்பெற்றுள்ளது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவரது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.