சாத்துார்: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது

விருதுநகர் மாவட்டம், சாத்துார் அருகே உள்ளது மேலப்புதுார் கிராம். இந்த கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சாத்தூர் தாலுகா காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது. தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் சென்ற போலீசார் சோதனை செய்தனர்.

சோதனையில் மேலப்புதூரை சேர்ந்த ஆனந்த் என்பவரிடமிருந்து 150 கிராம் கஞ்சா மற்றும் ரொக்கப் பணம் ரூ 5300/-ஐ கைப்பற்றி சாத்துார் தாலுகா காவல் நிலையத்தில் ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி