பின்னர் கண்டன பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், இந்திய அரசின் அறிவுறுத்தலின்படி குடும்பக் கட்டுப்பாட்டை முறையாக கடைபிடித்ததால் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை குறைத்ததற்கு தண்டனையாக தமிழ்நாட்டில் உள்ள 39 எம்.பிக்களில் இருந்து 30 எம்பிக்களாக குறைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என குற்றம்சாட்டினார். மேலும் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், வட மாநில மாணவர்கள் இந்தி மட்டுமே படிப்பதால் தமிழகத்தில் வேலை பார்ப்பதாகவும், ஆனால் தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை மூலம் தமிழ் மற்றும் ஆங்கிலம் கற்றுக்கொண்ட நம்முடைய மாணவர்கள் வெளிநாடுகளில் வேலை செய்கிறார்கள் என பேசினார்.
தமிழ்நாடு தேர்தல் தேதி அறிவிப்பதில் தாமதம்.. வெளியான முக்கிய தகவல்