இராஜபாளையம்: மாதாந்திர பராமரிப்பு; நாளை மின்தடை

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகர் பகுதியில் நாளை ஜூன் - 12 ஆம் தேதி காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்தடை இருக்கும் என்று மின்வாரிய பொறியாளர் அறிவித்துள்ளார். 

இராஜபாளையம் துணை நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக துணை மின்நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதியான PSK நகர், அழகைநகர், RR நகர், மலையடிப்பட்டி தெற்கு, INTUC நகர், சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, பேருந்து நிலையம், சத்திரப்பட்டி, கலங்கா பேரி, வரகுண ராமபுரம், எஸ். ராமலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் காலை 09.00 முதல் மதியம் 02.00 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று மின்பொறியாளர் முத்துராஜ் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி