இராஜபாளையம்: தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்தவர் கைது...

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், சேத்தூர் அருகே உள்ள பேருந்து நிறுத்தம் முன்பாக வாலிபர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக சேத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் லோவேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வில் சேத்தூர் புதியசாமி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த 46 வயது வாலிபர் பேச்சிமுத்து என்பவர் வெளி மாநில லாட்டரி சீட்டினை விற்பனை செய்வது தெரியவந்தது. மேலும் அவரிடமிருந்து வெளி மாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்கப் பணம் ரூ.420/- கைப்பற்றிய போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி