இராஜபாளையம்: கொட்டி தீர்த்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சி...

ராஜபாளையத்தில் கொட்டித்தீர்த்த மழை. விவசாயிகள், பொதுமக்கள். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதகாலத்திற்கும் மேலாக கடுமையான வெயில் வாட்டிவதைத்தது. 

வெயிலின் கொடுமையைத் தாங்க முடியாமல் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிவந்தனர். இதனிடையே தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் பரவலாகப் பலத்த மற்றும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் வழக்கம்போல், இன்று காலை வெயில் வாட்டிவந்தநிலையில், திடீரென மேகங்கள் இருண்டு, பலத்த காற்றுடன் ராஜபாளையம் நகரப்பகுதி, தளவாய்புரம், சேத்தூர், சத்திரப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. கடந்த ஒரு மாதகாலமாக மழையின்றி, வெயிலில் கடும் அவதியுடைந்து வந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், கொட்டித்தீர்த்த மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி